வெள்ளி, 20 மார்ச், 2020

இவர் (ரஜனி) வரல்லேன்னு யார் அழுதா?

இவர் (ரஜனி) வரல்லேன்னு யார் அழுதா?
=========================================ருத்ரா


விண்குழல் காணொளிகளில்
யாரோ ஒருவர் 
இப்படி சொல்லியிருக்கிறார்.
அப்படி ஒன்றும் இல்லையே!
நான் முதலமைச்சராக வரமாட்டேன்
என்று அவர் சொன்னவுடன்
ரசிக வெள்ளம் 
சோகத்தில் கண்ணீர் வெள்ளம் ஆனதே!
அது ஏன்?
அது எப்படி?
இது 
"டாய்ஸ்டோரி" எத்தனையாவது
என்று தெரியவில்லை.
அந்த குண்டு பொம்மையிலிருந்து
அந்த பொட்டெட்டோ முகம் 
தாடி மீசை முண்டைக்கண்கள் உள்ளிட்டு `
அந்த டைனொசார் பொம்மை வரைக்கும்
அழுது தீர்த்தன.
அப்புறம் அந்த‌
சூப்பர்ஸ்டார் கௌபாய் பொம்மை
குதிரையை மாத்திடலாமா?
காட்டை மாத்திடலாமா?
அப்புறம் அந்த‌
குரங்கு நரி கரடி யானை
பொம்மைகளுக்கு எல்லாம்
மற்றும்
சிங்கம் புலி முதலைகளுக்கு எல்லாம்
"ஆன்மீக" காத்து அடைத்து
கும்மென்று
ஓட்டுப்பெட்டியைச்சுத்தி
குலை குலையாய் முந்திரிக்காய்
விளையாட்டு ஆட வைக்கலாமா?
என்று
அந்த பெரிய மண்டையைச்சொறிந்து சொறிந்து
யோசிக்கிறது!
காட்டுக்குள்ளே திருவிழா.
கச்சா பிலிமுக்குள்
சுநாமி சுநாமி சுநாமி!
எல்லோரும் 
ஓடித்தப்பித்துக்கொள்ளுங்கள்.

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக