திங்கள், 24 பிப்ரவரி, 2020

தாஜ்மகால்

தாஜ்மகால்
=====================================ருத்ரா

விருந்தினர்
அயல் நாட்டு நண்பர்.
தாஜ்மகாலின்
உள்ளும் புறமும்
கொடியும் பூக்களுமாய்
அங்கு கலை ஒளியாய்
பின்னிக்கிடப்பதை
கண்டு கண்டு ரசித்தார்.
உள் நாட்டு நண்பர்
மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.
"நமஸ்தே ஜி!
நன்றாகப்பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்த தடவை
நீங்கள் பார்க்க வரும்போது
இது கட்டாந்தரை ஆகிவிடலாம்.
எங்கள் கடப்பாரை சேனைகளின்
கைகள்
துறு துறுத்துக்கொண்டிருக்கின்றன."

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக