செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ரஜனிக்கு இரட்டைத்தலைச் சின்னம்

ரஜனிக்கு இரட்டைத்தலைச் சின்னம்
=========================================ருத்ரா

ரஜினி
வீட்டின் கேட்டைத்திறந்து வந்து
அறிக்கை கொடுத்துவிட்டார்
நாட்டின் ஜனநாயகக்கேட்டை
அறைந்து சாத்தி விட்டு.
சி ஏ ஏக்கு ஆதரவாய் 
குரல் கொடுத்தார்.
முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை
என்றார்.
அப்படி யாராவது ஒரு முஸ்லீம்
பாதிக்கப்பட்டால்
அவர்க்கு துணைநின்று
குரல் கொடுக்கும்
முதலாமவன் நான் தான் என்றார்
நாளைய முதல்வன் என்ற தொனியில்.
நிருபர் உடனே கேட்டார்.
அஸ்ஸாமில் பாதிக்கப்பட்டவர்களில்
நம் பெருமைக்குரிய முன்னாள் ஜனாதிபதி
ஃபக்ருத்தின் அலி அகமதுவின் 
குடும்பத்தார்கள் தானே..
இதற்கு உங்கள்...
நிருபர் முடிக்கும் முன்
அவர் கேட்டைச்சாத்திவிட்டு
வீட்டுக்குள் நுழைந்தார்.
மக்களிடம் காட்ட அவர்
இரு தலைகள் வைத்திருக்கிறார்.
முதலில் சொல்லியதை
மறுக்க அல்லது  மழுங்கடிக்கவே
இந்த இன்னொரு தலை.
வரும் தேர்தலுக்கு 
தேர்தல் ஆணயம் அவருக்கு
இந்த சின்னத்தை தாராளமாய் வழங்கலாம்.
அது இரட்டை இலைக்குப்பதில்
இரட்டைத்தலை ஆகும்.

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக