செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

பெரியார்.

பெரியார்.
==================================ருத்ரா

பெரியார் 
ஒரு தீப்பெட்டி.
அறிவின்மை எனும் 
இருட்டைக் கொளுத்த வந்த‌
வெளிச்சம்.
கடவுள் இருக்கிறார் என்பதில்
அந்த "கிறார்"லிருந்தே
இலக்கணப்பிழை தொடங்குகிறது.
மனிதன் 
தன்னை இன்னொன்றில் 
அப்பிக்கொள்வதில்
அந்த இருக்கிறார் 
எனும் கற்பிதத்தின் தப்பிதம்
துல்லியமாக தெரிவிக்கிறது
கடவுள் என்ற கற்பனையை.
மனிதன் மனிதனைத்தாண்டி
யோசிக்க முடியாது என்பது தான்
கடவுளுக்கு மனிதவேடம் போடவைக்கிறது.
வேடம் போட்டாவது
மனிதன் மனிதனை சுரண்ட‌
தந்திரம் செய்வதே
மதம் ஆகும்.
கடவுளை மற என்றால்
அந்த மூடப் போர்வையை 
உதறு என்று பொருள்.
மனிதனை நினை என்றால்
மனிதனுக்கு மனிதன் 
இடையே பாயும் அந்த‌
மானுட மின்சாரத்தை
கண்டு கொள் என்று  பொருள்.
இந்த மெய்யறிவை
கோடரி கொண்டு பிளப்பதே
வர்ணாசிரமம்.
அந்த கொலைவெறி எனும்
கோடரியை ஏந்திக்கொண்டிருப்பவர்கள்
எல்லாம் 
சிறியாரிலும் சிறியார்.
அந்தக்கொடரியையே
தன் அறிவால் பிளப்பவர்கள்
பெரியாரிலும் பெரியார்.
ஆம்
பெரியார் பார்வையில்
சாதி மத இமயங்கள் எல்லாமே
வெறும் கூழாங்கற்கள் தான்.

"மானுடம் வென்றதம்மா"
பெரியார் எனும் 
"ஆயுத" எழுத்துக்களால்.

========================================
Click here to Reply

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக