புதன், 12 பிப்ரவரி, 2020

"டெல்லி"

"டெல்லி"
____________________________________________ருத்ரா

டெல்லி நகர்
முகமூடிகளால்
மூடப்பட்டுள்ளுது.
அத்தனை தூசி மயம்.
அந்த படலத்துக்குள்
அரவிந்த் கெஜர்வால்
அரசியலும்
ஒரு ஆரண்யகாண்டம் தான்.
ஆனாலும்
மத வன்மைத்தை எதிர்த்த‌
ஒரு ஊமை மூட்டமும்
அங்கே அந்த வெற்றியைக்
கொடுத்து இருக்கிறது.
இருப்பினும்
பி ஜே பி காரர்கள்
அங்கே
"ஒரு அலிபி"யை நிறுவியிருக்கிறார்களோ
என்ற ஐயம் இருக்கிறது.
இவிஎம் மோசடி
பேசப்பட்டு வரும் இந்த வேளையில்
பார்த்தீர்களா
எங்கள் நேர்மையை
என்று காட்டிக்கொள்ளுகிறார்களோ
என்றும் சிந்திக்க வைக்கிறது.
அவர்களுக்கு வேண்டியது
பாராளுமன்ற மிருகபலம்.
இந்த சுண்டைக்காய் பிரதேசங்களுக்குத்தான்
கவர்னர்கள் கொடுக்கும்
குடைச்சலே போதுமே.
இவர்கள் ராமாயணத்தில் நடக்கும்
"மாயமான் வேட்டையோ" இது?
என்ற நெருடல்களும் இருக்கின்றன.
இருப்பினும்
கொண்டாடப்படவேண்டிய
நம்பிக்கைகளின் வெற்றி தான் இது.
____________________________‍‍‍‍‍‍___________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக