சனி, 29 பிப்ரவரி, 2020

எது காதல்?





எது காதல்?
=======================================ருத்ரா

காதல் இது அல்ல.
காதல் அது அல்ல.
பின் 
எது காதல்?
அந்த பட்டாம்பூச்சிகளின் 
பின்னே போ!
பூக்களுள் நுழைந்து
மகரந்தக் கடல் துளிகளுக்குள்
இழைந்து விடு.
இன்னும்
காதலின் ரங்கோலிகள்
உனக்கு வண்ணம் காட்டவில்லையா?
அதோ
அந்த அடி வானவிளிம்பை
அதன் மீது கவிழ்ந்துகொண்டிருக்கும்
மேல் வானக்கிண்ணத்தை 
உற்றுப்பார்.
ஆம்.
அது உன் காதலியின்
இமை மூடிய‌ 
ஏக்கத்தில் எழுதிய கிறக்கத்தின்
பிஞ்சுக்கவிதை.
காதல் பிழம்பின்
அந்த விடியல் கீற்றை 
இன்னுமா நீ புரிந்து கொள்ளவில்லை?

========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக