வியாழன், 20 பிப்ரவரி, 2020

காதலுக்கு கண்ணில்லை.

காதலுக்கு கண்ணில்லை.
‍‍‍‍_________________________
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

கண்ணில்லை தான்.
அதனால்
விழியாவும் முகம் ஆச்சு.
முகம் யாவும் விழி ஆச்சு.



உன்னைக்காணாத கண்ணும்..
____________________________‍‍‍‍_____________

அவளைக்"கண்டதில்லை."
விரல்கள் ப்ரெய்லி ஆயின.
தடவு மொழியில்
தடவு இன்பம்.
கண்டேன் கண்டேன்
அந்த எழுத்துக்கள்
அவள் "பெயர்".
அதுவும் நானாக வைத்த
பெயர்.

______________________________________________



பொன்சிறகு
_____________

மனதைக் கண்கள் ஆக்கி
தரிசித்துக்கொண்டோம் அந்த‌
காதல் பொன் சிறகை!


காதலுக்கும் ஒரு கண்ணாடி.
____________________________

கிட்டப்பார்வையில்
அவள் நகவளைவுக்குள்
ஆயிரம் நிலாப்பிறைகள்.
தூரப்பார்வையில் அவள்
நட்சத்திரங்களின் பூ மழை!


________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக