புதன், 12 பிப்ரவரி, 2020

"பெரியாரிசம்"

"பெரியாரிசம்"
====================================================ருத்ரா
(குறும்பாக்கள்)



கடவுளை மற...
=========================

பெரியார் மொழியில்
இரு வரியில் கடவுள்
மனிதனுக்கு பாடிய ஒரு
விஷ்ணு சஹஸ்ர நாமம்.


தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை
=====================================

மீண்டும் மொழி பெயருங்கள்.
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே"
முன் தோன்றியது தமிழ்
என்கிறார் பெரியார்.

பெண்ணியம்
=======================================

மானுட நேசம் எனும்
நட்பு தான்
பெண்ணிடம் முதலில் பூக்கும் பூ
என்று கண்டார் பெரியார்.

கோபம்
==================================

கண்மண் தெரியாமல்
கோபம் வந்த போதும்
இவர் திட்டும் கெட்ட வார்த்தை
இது தான்.
"வெங்காயம்"

திராவிடம்
=======================================

நோய் உற்ற தமிழர்களுக்கு
இவர் கண்டு பிடித்த‌
நோய் எதிர்ப்பு எனும்
(இம்யூனிடி)
மருந்தே இது.

ராமாயணம்
===========================================

தேசிய இனத்தை
அரக்கர்களாக்கி
அடிமையாக்க வந்த‌
வெறும் அம்புலிமாமாக்கதை
என்ற உண்மையைக் கண்டுபிடித்தார்
பெரியார்.

கடவுளை நம்புபவன்...
======================================

அறியாமைச்சிதை அடுக்கி
தன்னையே கொளுத்திக்கொள்ளும்
ஒரு மன முறிவின்
வெளிப்பாடே இது.

சாதியும் மதமும்
========================================

இந்த சதுப்புநிலக்காட்டில்
மானுடம்
புதைந்து போவது கண்டு
பொங்கி எழும் அறச்சீற்றமே
பெரியாரிசம்.

=========================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக