செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

அண்ணே! அண்ணே!

அண்ணே! அண்ணே!
==================================================ருத்ரா

"ஏண்ணே! இப்ப நம்ம கைவசம் மூணு அணி இருக்கு.எந்த அணியிலே சேரலாம் சொல்லுங்கண்ணே"

"நமக்கு வர்ர "நலத்திட்டங்களப்பாத்து" முடிவெடுத்துற வேண்டியது தானே.ஒரு தடவைக்கு நூறு தடவை நல்லா யோசிச்சு முடிவு எடுப்பா."

"நூறு தடவை இல்லேண்ணே."கோடி" தடவை நெனச்சுப்பாத்தாச்சு.
மூணுலேயும் சேரவேண்டியது தான்."

"அது எப்படிடா?"

"ஒரு இடத்துல சேந்துட்டு..கொஞ்சம் இருங்கண்ணே! எனக்கு உடம்பு சரியில்ல! வைத்தியம் பாத்துட்டு வந்திர்ரேன்னு சொல்லிட்டு அங்க போயிற  வேண்டியது தான்.அப்புறம் அங்கே இருந்து தோ வந்திடரேண்ணே! "ஆத்தா குறி சொல்லப்பொறா! கோடங்கிக்காரக எல்லாம் வந்துட்டாக.என்னன்னு கேட்டுட்டு வந்திடரேண்ணேன்னு கெளம்பிற வேண்டியது தான்..."

"டேய்..டேய்..பாத்து பாத்து...உங்க தலைகளையெல்லாம் எண்ணி
கணக்கெடுக்க நினைச்சா "கவர்னரே" மயக்கம் போட்டு விழுந்துருவாரு.."

___________________________________________________________________
இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக