வியாழன், 17 ஆகஸ்ட், 2017

அல்வா வாசு


அல்வா வாசு
========================================ருத்ரா

அல்வா வாசுவை நினைத்தால் வடிவேலு தோன்றுவார்.
வடிவேலுவை நினைத்தால் அல்வா அருகில் நிற்பார்.
மனிதர்களின் கவலைகளை
தன் ஊமைத்தனமான வசனத்தால்
விரட்டி சிரிக்கவைத்து வெளிச்சமேற்றும்
இருட்டுக்கடை அல்வா அவர்.
அவர் நிச்சயம் இந்த நோயிலிருந்து
மீண்டு வரவேண்டும்.
நகைச்ச்சுவையின்
நாதஸ்வரக்கச்சேரியில்
அவர் ஓரமாக நின்று 
"ஒத்து நாயனம்" வாசித்தாலும்
அவர் நிமிண்டிவிடும் சிரிப்பலைகளில்
டி.என்.ராஜரத்னம்பிள்ளையின்
நுணுக்க இசையும் கேட்கும்.
அவர் நலமோடு வந்து 
நம்மை சிரிக்க வைக்க‌
மனம் நெகிழ்ந்து அந்த‌
இயற்கையை மன்றாடி வேண்டுகிறேன்.
பெயரில் கல் வைத்திருன்ந்தாலும்
அன்பான கல்லீரலே
அவரை வாழவிடு!
உன் கல் மனம் இளகட்டும்.
அவரும் நலம் பெறட்டும்.

நெகிழ்வுடன் ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக