திங்கள், 14 ஆகஸ்ட், 2017

நூலேணி (2)

நூலேணி (2)

நிழல்
===========================================ருத்ரா

தாமஸ் ஹார்டி கவிதை எழுதினார்.
குறும்புக்கார சிறுவன் கையில்
பட்டாம்பூச்சி
இறக்கை வேறாய் உடல் வேறாய்
பிய்க்கப்படுகிறது.
கடவுளும் அப்படி ஒரு சிறுபயல் தான்.
மதங்கள் செய்யும் கசாப்பில்
மனிதம் எனும் சிறகுகள்
பிய்த்து எறியப்படுகின்றன.
கடவுளே பிறந்து வந்து
கடவுளை மறுத்தாலும்
கடவுளின் நிழலே
அக்கடவுளை கழுவில் ஏற்றும்!

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக