வியாழன், 7 ஜூலை, 2022

"திருவிளையாடல்"



"திருவிளையாடல்"

_______________________________________

ருத்ரா


அந்த வேடன் 

தன் கண் இரண்டையும் பிடுங்கி

நீர் வடியும் சிவன் கண்களுக்குப் பதில்

அதில் அப்பி வைத்தான்.

அடையாளம் தெரிந்து கண்களை பதிக்க‌

அந்த வேடன் செருப்புக்காலை

சிவனின் கண்களில் வைத்தான் 

என்பதற்கு 

அவனுக்கு சிரச்சேதம்.

சிவனும் பக்தியை மெச்சி

அவனை எழுப்பி கைலாசத்தில் 

வைத்துக்கொண்டான்.

இவர்கள் மட்டும்

இன்னமும்

அவனை பட்டியல் இனத்தில் வைத்து

சித்ரவதைகள் செய்தார்கள்.

இந்த வதைகளில்

புண்பட்டது சிவன் தானே.

இவர்கள் ஏன்

புண் பட்டது புண்பட்டது என்று

கோர்ட்டுக்கு போகிறார்கள்?


_______________________________________________‍‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக