சனி, 23 ஜூலை, 2022

வெண்பறை அதிர்ந்த குடுமியின் நாரை

 வெண்பறை அதிர்ந்த குடுமியின் நாரை

-------------------------------------------------------சொற் கீரன்.

( ஓலைத்துடிப்புகள் - 109)




வெண்பறை அதிர்ந்த குடுமியின் நாரை

எக்கர் புடைத்த இருங்கழி கூரும்

கயங்கொளீஇ பருங்கயல் துடிசெத்து உகள‌

ஈர்ஞெண்டின் பிதுங்கு விழிஅன்ன‌

புல்லிய பூம்பொழி வேம்பின் அண்ணிய‌

அடைகரை தீண்டும் திரைநுடங்கு மருங்கில்

முன்னீர் புணர்ந்த நோதல் உற்று 

முப்புரி அவிழ்த்து அதன்  கொடுங்குரல் 

புக்கு மாயம் ஓர்த்தாள் மன்னே 

மூன்று நீரும் முறுக்கல் காட்டும் 

அவள் கண்ணீர் கண்ணீர் கண்ணீர் மற்றே.

வருவேன் என்ன  பரவை பாய்ந்தவன் 

கல்பொரு நுரை தொறும் அழிந்து அடர்ந்து 

காட்சி மல்கிய வெந்துயர் ஏனோ 

சிறையடித்த புன் வெண் குருகே 

கூரலகு பிளந்து கூர் உரை கூறு.

-------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக