வியாழன், 7 ஜூலை, 2022

எக்கோ பார்க்

 


இனிய சூழலில் ஒரு பூங்கா

(எக்கோ பார்க் மதுரை)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________



பசுமை நிழல் கவிக்கும் பூங்கா.

இதில் நம் மனங்களையெல்லாம்

கட்டிப்போடும் இடம் உண்டு.

அது தான் அந்த

"ஓட்டை உடைசல்கள் கொண்டு"

உருவாக்கப்பட்ட சிற்பங்கள்.

உள்ளம் கிழிந்து

கந்தல்களாகிப்போனவர்களே

அவற்றை

உற்றுப்பாருங்கள்.

உதவாது என வீசி எறியப்பட்டவை

உயிர் பெற்று நம்மை

உற்றுப்பார்ப்பதை.

அதில் அந்த அழகிய மான்!

கொம்புகள் சிலிர்க்க‌

காட்டின் அடர்ந்த இருட்டின்

மரண சுவாசத்தைக்கூட‌

பச்சைப்புல்லாய்

மேயப்புறப்பட்ட நம்பிக்கை அது.

அடுத்த கணம்

அது எந்த புலியின் இரப்பைக்குள்

மாமிசமாய்க்கிடக்குமோ?

இருப்பினும் 

சங்கத்தமிழ் செய்யுட்களின்

வரிகளையே புல் கீற்றுகளாய்

குளிர்மை காட்டி நிற்கும் உயிர்மை அது.

திருக்கு ஆணிகளும் முறுக்கு ஆணிகளும்

எலும்புகளாய் சதையாய்

ஆகி ஒரு

புள்ளி மான் இங்கே

புயல் மூச்சையும் புற்படுகையில்

நிரவிக்காட்டும் 

செம்மைக்காட்சி இது!


___________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக