ஞாயிறு, 3 ஜூலை, 2022

என்று விடியும் இந்த வானம்?

 என்று விடியும் இந்த வானம்?

_______________________________________‍____

ருத்ரா.



என்ன உலகமடா?

ஒரு ஞானி 

அந்த தத்துவத்தின் சாறு பிழிந்து

அருந்துகிறார்.

அவருக்கு 

மொத்த பிரபஞ்சமும் 

ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.

விஞ்ஞானிகளும்

கிட்டத்தட்ட தொண்ணூற்று சொச்சம்

விழுக்காடுகளுக்கு

இந்த பிரபஞ்சம் 

இருட்பிண்டமும் இருள் ஆற்றலுமாகவே

திணிக்கப்பட்டிருக்கிறது

என்று 

கணித சமன்பாடுகளைக்

காட்டுகிறார்கள்.

ஒன்றுமில்லை என்ற நாத்திகமே

இங்கு

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

கண்டறிந்தன.

இதில் 

பிரம்மனுக்கு பிறந்தவன்

அவன் என்றும்

அவன் பூணூலே

"ஒஸ்தி"என்றும்

உடன் உறை மனிதர்களை

குப்பை கூளம் என்றும்

மந்திரங்கள் பிதற்றுவது

என்ன நியாயம்? என்ன நீதி?

சலவையே செய்யமுடியாத இந்த‌

அழுக்குக்கா

"சலவைக்கல்லில்"

கோபுரங்கள் கட்டுவது?

நாலு  வர்ண அஞ்சு வர்ண‌

பாகுபாடு என்று

மனிதனைக்கூறு போடுவது

வெறும் கூறு கெட்ட செயல் அன்றி

வேறு என்னவென்று கூறுவது?

அடி மட்ட‌

மனிதர்களை புழு பூச்சிகளாக‌

நசுக்கிக்கொண்டே

இதோ பாருங்கள் 

இந்த "மரவட்டை"யை நாங்கள்

ஜனாதிபதி ஆக்குகிறோம்

என்று

தம்பட்டம் கொட்டுவது

வெறும் ஏமாற்று வேலை தானே?

அன்பான மக்களே

முட்டாள் தனமான் மகுடங்களை

சூட்டி சூட்டி 

உங்கள் முடக்கும் இந்த‌

தந்திரங்களை

என்றைக்கு முறியடிக்கிறீர்களோ

அன்றைக்குத்தான்

உங்கள் "சுப் ப்ரபாதம்"

உயிரோடு ஒலிக்கும்.

அது வரை இந்த 

மரணக்கூப்பாடுகளில்

களிப்பு கொண்டிருங்கள்.


_______________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக