திங்கள், 25 ஜூலை, 2022

வாழ்க திராவிடம்!

 வாழ்க திராவிடம்!

_______________________________________

ருத்ரா




வேதகாலத்தில் 

பழங்குடிகள் என்பவர்கள்

பயங்கரமானவர்கள்.

காற்றில் எனக்கு மட்டும் கேட்டவை இவை

என்று

மீசை தாடிப்புதருக்குள் 

இருந்து அவர்கள் ஒலியெழுப்பினார்கள்.

நான் மட்டுமே ஒலிப்பேன்.

இன்னொருவர் செவிக்குள் அது

நுழைந்து 

அவர் வாயால் ஒலிக்கப்பட்டால்

அது எச்சில் தான் என்றார்கள்.

அவர்களே ரிஷிகள் எனப்பட்டார்கள்.

அவர்கள் அங்கே வருவதற்கு முன் 

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய்

அங்கே இருந்த பழங்குடிகள்

அவர்களுக்கு பகைவர்கள் ஆனார்கள்.

அவர்கள் மொழி 

இவர்களுக்கு புரியாததால்

அது "பிசாசு மொழி"ஆனது.

"நம் யாகங்களை அழித்து விடுவார்கள்.

இந்த சப்பை மூக்கி கருப்பர்கள்

மந்திரம் ஏவி நம்மை அழித்துவிடுவார்கள்.

என்றார்கள்.

விரைவாக ஓடும் குதிரையின் கால்களை

அவர்கள் வேதம் "த்ராவிட பாணி"என்கின்றது.

இந்த சப்பைமூக்கி கருப்பர்களும்

குதிரைகள் போல் 

மின்னலென தோன்றி மின்னலென‌

விரைவாக மறைந்து விடுவதால்

த்ராவிடர்கள் என அழைக்கப்பட்டார்கள்.

சரி.

அதெல்லாம் போகட்டும்.

இப்போது நமக்கு ஒரு பழங்குடி இனத்தவர்

குடியரசு தலைவர் ஆகிவிட்டாரே.

என்ன தான் குருதட்சிணை மூலம்

கட்டை விரலை வெட்டி வாங்கிக்கொண்டாலும்

நம் மகுடத்தை அவர்கள் 

தலையில் சூடவேண்டிய 

அவலம் வந்து இருக்கிறதே.

நம் யுத்த தந்திரத்தில் இதுவும் ஒன்று

என்று

இவர்களுக்கு புரியவா போகிறது

என அந்த துரோணாச்சாரியர்கள்

தமக்குள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.

அவர்கள் பல்லை நற நறத்துக்கொண்டு

பூங்கொத்துக்களை கொடுப்பதில்கூட‌

அந்த ஒலி நமக்கு 

கேட்கத்தான் செய்கிறது.

தமிழ் நாட்டு ஸ்டாலின் தந்த‌

"திராவிட பாணி" அரசு

இப்போது இந்தியா முழுமைக்கும் 

வந்து விட்டதே!

அது பொம்மையோ பொய்மையோ

அதுவே இப்போது உண்மை.

வாழ்க திராவிடம்! வெல்க திராவிடம்!



___________________________________________________‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக