செவ்வாய், 26 ஜூலை, 2022

உன்னை ஒன்று கேட்பேன்.

 உன்னை ஒன்று கேட்பேன்.

_______________________________________ருத்ரா


உன்னை ஒன்று கேட்கட்டுமா?

யார் கேட்கிறார்கள்

என்று தெரியவில்லை.

எதை கேட்கிறார்கள் 

என்று தெரியவில்லை

எங்கிருந்து கேட்கிறார்கள் 

என்றும் தெரியவில்லை.

நெஞ்சில் கேட்டேன் 

மனசாட்சியெல்லாம் இல்லை.

உன்னை ஒன்று கேட்கட்டுமா?

மீண்டும் கேள்வியின் ஒலி.

அப்புறம் சொற்களின் மழை..

முன்னொரு காலத்தில்

கடவுள் கடவுள் என்று 

ஒருவன் இருந்தான்.

அவன் தான் 

எல்லாத்தையும்

எல்லாரையும் செய்தான்.


அது சரி

இப்ப என்ன?


அதையெல்லாம் 

அவன் ஏன் செய்தான் என்று

இப்போது அவனையே கேட்கிறான்.

அவனுக்கு தெரியவில்லை

அல்லது விளங்கவில்லை.

அது தான் 

உன்னிடம் கேட்கிறான்.


சரி தான்.

அதான் நானும் நெனச்சேன்.


எத நெனச்சே?..எத நெனச்சே?


அதான்யா..அதே தான் நானும் நெனச்சேன்


எதெ நெனச்சே..எதெ நெனச்சே..


அதே தான்..நானும்..நெனச்..


"நிறுத்திக்கொ.."


அவன் வாயை கடவுள் பொத்தினார்.


அவன் என்ன நெனச்சான்..

என்ன நெனச்சான்..

. . . . . . . . . .

. . . . . . . . . . . 

தனக்குத்தானே இந்த கேள்வியை

"சஹஸ்ர நாமமாய்" கேட்டுக்கொண்டு

கடவுள் போய்க்கொண்டிருந்தார்.


__________________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக