சனி, 31 ஜனவரி, 2026

பகிர்வனம் by சொற்கீரன்

 


பகிர்வனம் by சொற்கீரன்


31.01.2026


________________________________________

Feed posts

Vannadasan Sivasankaran S

4ம.நே

 ·

சாளர இடுக்குகளுக்குள் இருந்து

புறா தன் குரலைப் பறக்கவிடுகிறது வெயிலில். 

பனிக்காலத்தின் கண்கள் போல் விரிந்திருக்கின்றன 

முட்டைகள்.

சாம்பல் நிறமுடையது இந்த உச்சிப் பகல்.


___________________________________________________



பகிர்வனம் 13


விடைக்கும் 

சொல்வலிப் பிரளயங்களை

கவிதைகள் என்று

பிரசவிக்கும் 

தருணங்கள் 

எங்கோ தொலை வானத்தில்

புழுக்கூடுகளின் ஜிமிக்கிகளாய்

ஆடி ஆடி 

தொல்லை தருகின்றன.

____________________________________


__________________________________________‍

Vannadasan Sivasankaran S

5ம.நே

 ·

ஒரு காலத்தில்

எல்லாம் எளிமையாகவே இருந்தன.

ஒரு கட்டத்தில்

எல்லாம் எளிமையாகிவிடுகின்றன.

எளிமையற்றதென்பது

ஒரு காலத்துக்கும்  ஒரு கட்டத்துக்கும்

இடையில் உள்ள

அவரவரின் தூரம் மட்டும்.


_____________________________________________


பகிர்வனம் 14


காலம் 

கட்டம் கட்டத்தெரிந்த‌

காலத்தில்

அந்த கட்டங்கள்

மணலுக்குள் எறிந்த சோழிகளாய்

சவத்துக்கிடந்தன.

நகர்ச்சி எனும் உயிரற்ற‌

காலத்துக்கு

சிதை மூட்டுவார் யார்?

____________________________________

சொற்கீரன்


காலி செய்துவிட்டுப் போன வீட்டுக்குள்
அந்தப் பூனை எத்தனையோ முறை இரவில் வந்திருக்கிறது.
பகலில் இதுதான் முதல் முறை.
சரி பார்ப்பது போல வீடு முழுவதிலும் நடந்தது.
ஜன்னல் கம்பிகளின் நிழலுடன் விழும் வெயிலை
வலது முன்கால் பாதத்தால் அறைந்து அறைந்து விளையாடியது.
நான்கு கால்களையும் உயர்த்தி
வெயிலின் மடியில் படுத்து
அப்படியே உறங்கிவிட்டது.



___________________________________________________________---

பகிர்வனம் 15 அந்த சன்னல்கம்பிகளின் வழியே சூரியன் தன் பூனைக்குட்டிகளை நுழைத்து அனுப்பியது. அவை பூச்சித்திர வேலைப்பாடுகளை தரையில் பரப்பி ரத்தினக்கம்பளம் விரித்து படுத்துக்கொண்டன. மாலையில் அவற்றின் கழுத்துகள் நீண்டு போயின. மீசை மயிர்கள் வீட்டின் சுவர்களுக்கு வெள்ளை யடித்தன. அப்புறம் எல்லாம் தூங்கப்போய்விட்டன. ___________________________________________ சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக