திங்கள், 4 ஏப்ரல், 2022

தரிசனம்

 தரிசனம்

_____________________________________ருத்ரா



உன்னிடம் 

என் அழுகைகளை

கண்ணீர்ப்பூக்களாக்கி

மாலை தொடுத்துவிட்டேன்.

என் ஒப்பாரிகளை 

மந்திரங்கள் ஆக்கினார்கள்.

கும்பங்களில் நீர் நிறைத்து

நூல்கள் சுற்றி 

மாவிலைகளை தோய்த்து 

அந்த "பிரம்மனை"

அதில் கொண்டுவந்து விட்டோம்

என்று 

முழங்கி முழங்கிச்சொன்னார்கள்.

பாருங்கள் திவ்ய தரிசனம் 

என்றார்கள்.

அந்த நீரும் நிழல் காட்டியது

அழுகின்ற என் முகத்தை 

அசைந்து நெளியும் பிம்பமாய்.


__________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக