ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

நடு கற்கள்




நடு கற்கள்

====================================ருத்ரா



அது எந்த வருடம்?


ரெண்டாயிரத்து சொச்சம்


இருபத்தஞ்சா?


முப்பத்தஞ்சா?


ஏதோ ஒன்று விடுங்கள்.


மதுரையிலிருந்து


ராமேஸ்வரம் செல்லும் பாதை


அல்ல அல்ல..


ஃபோர் வே ரோடு...


மைல் கற்களில்


இந்தி மட்டுமே..


வழியில் ஒரு ஸ்வச்சாலய்க்கு இறங்கி


இயற்கைக் கடன்..


மீண்டும் காரில் ஏறும் போது


அந்த மைல் கல்லை


இந்தியை எழுத்துக்கூட்டி படித்தேன்.


கீ...ழ..டி..


என்ன தமிழனின் தொன்மை


அடையாளம் அல்லவா?


காரை நிறுத்திவிட்டு


அதைச்சுற்றி பார்க்க நினைத்தேன்.


அங்கே இருந்த


தகவல் பலகைகளின் 


இந்தியில்


என்னென்னவோ எழுத்துக்களை


வடாம் பிழிந்து வைத்திருந்தார்கள்.


வரவேற்பு தோரணத்தில் பெரிய இந்தி எழுத்து.


அதன் கீழ் ஆங்கிலத்தில்.


"திஸ் சைட் இன்டிகேட்ஸ் அவர் "ஆர்யன்" சிவிலிசேஷன்"


ஐயகோ!


தமிழின் தொன்மை


வடமொழிக்குள் தொலைந்து போய் விட்டதோ?


காரில் பயணம் தொடர்ந்தேன்.


ராம..ராம..ராம....ராம....


ராமேஸ்வரம் வரைக்கும்


அந்த மைல்கற்களில் எல்லாம்


ரத்தம் வழிந்தது.


தமிழன் தமிழை மறந்ததால்


அவன் பயணத்தின் மைல்கற்கள் எல்லாம்


இங்கே


அவன் அழிவை  அடையாளப்படுத்தும்


நடுகற்களாகவே தோன்றின!


திடுக்கிட்டேன்.


................


.....................


சட்டென்று விழித்துக்கொண்டேன்.


தூக்கத்திலிருந்து தான்!


இந்த‌ வரலாற்று திருத்தங்களிலிருந்து


நாம்


எப்போது விழித்தெழுவது?


==================================================

06.04.2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக