செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இளையராஜா

 


இளையராஜா

_____________________________________ருத்ரா


கர்நாடக சங்கீதம் என்றால்

மும்மூர்த்திகளின் பேர்கள் தான்

உச்சரிக்கப்படும்.

தமிழ்த் திரையிசை என்றால்

இளையராஜா என்ற பெயர் மட்டுமே

இசைஞானியாய் தமிழ் நாட்டில்

எதிரொலிக்கும்.

இப்போதும் அவர் எதிரொலிக்கிறார்.

ஒப்பீடு என்ற ஒரு 

செயலைத்துவக்கி

இரு முனையிலும் 

எதிர் முனையாக இருப்பவர்களை

"வச்சு செஞ்சிருக்கிறார்" என்று

சொல்லவேண்டும்.

இப்போது பட்டி தொட்டியெல்லாம்

இந்த "டக் ஆஃப் வார்"

நெருப்புப்பொறிகளோடு

பற்றியெரியத்தொடங்கும்.

இப்போது தமிழர்கள்

முகமூடி போட்டுக்கொண்டிருப்பவர்கள்

யார் என்று புரியத்தொடங்கி இருப்பார்கள்.

2024 ஆம் பாராளுமன்ற தேர்தலுக்கு 

ஒரு புரிந்துணர்வையும் விழிப்புணர்வையும்

இது ஏற்படுத்திவிடும்.

டாஸ்மாக் டம்ளரில்

கோ மூத்திரம் கூட‌

நல்ல "சரக்கு"தான்

என்று 

விற்கும் ஒரு சந்தை யுத்தி தான் இது.

சிக்கிமுக்கிக்கல்லில்

ஒரு தீ யை "ஜனிக்க வைத்து"

ஜனனி ஜனனி என்று

பாடுகிறார் என்று நாம் எடுத்துக்கொள்வோம்.

இசை நுணுக்கங்களை ரகசியமாய் 

"நோட்ஸ் " எழுதுவதில் இவர் வல்லவர் தானே.

அந்த இமயத்துக்கு இந்தக்கூழாங்கல் இணையாகுமா?

இந்த உட்கருத்தை கசியவிட்டிருக்கிறார் என்பதே உண்மை.

"போடா போடா புண்ணாக்கு 

போடாதே தப்புக்கணக்கு"என்ற பாடலுக்குதான் 

இந்த ஒப்பீடு இசையமைப்பு.

இவர்கள் வேண்டுமானால்

நான்கு வர்ணத்தில் மத்தாப்பு 

கொளுத்துவார்கள்.

நமக்கு தெரியும் தீயின் வர்ணம் 

ஒன்றே தான்.

பிறப்பொக்கும் "ஒன்றே குலம்"தான்.

இசை ஞானி

இசை "ஞானி"தான்.


__________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக