செவ்வாய், 12 ஏப்ரல், 2022

சீர்பெறும் தமிழணங்கே!

 சீர்பெறும் தமிழணங்கே!

______________________________________ருத்ரா



கால ஓட்டத்தில் காணாமல் போன 

ஆரியம்  வென்ற தமிழணங்கே!

ஆரியம் என்பதன் வேர்ச்சொல்லே

"ஆர்" என்பதை ஆரும் அறிவர்.

"ஆர்" எனும் சிற்றுளித் தமிழே 

உங்கள் ஆரியப்பெருங்கடல் அறிவீரோ?

எங்கள் உரிச்சொல் "ஆர்" ஈன்ற‌

சொல் உரிந்து சொல் பிறந்ததே

உங்கள் ஆரியம் அறிவீரோ? 

தமிழால் உண்டு தமிழில் செரித்த‌

தமிழே தானே சமக்கிருதம்!

எத்தனை எத்தனை சொல்லோ

சமக்கிருதம் ஒலித்தபோதும்

அதன் வேரொலியில் கிளை நீட்டி

அதனை தழைக்க வைத்ததும்

தமிழே!தமிழே!அறிவீரோ?

மக்கள் வழக்கில் உயிரொலியில்

ஊடிநிற்கும் வலுவின்றி

முறிந்து வீழ்ந்ததே சமக்கிருதம்.

அயல் ஒலிச்சுமையும் பளுவாகி

அழிந்து போனதே சமக்கிருதம்.

தமிழின் ஊற்றும் உயிரும்

உலகம் எங்கும் சுடர் பூக்கும்.

மந்திரம் என்று ஒலிகிளப்பும்

தன்னலக்கூட்டம் மட்டுமே இங்கு

தறி கெட்டு ஆடி தலையில் தாங்கும்

கூச்சல் மொழியே சமக்கிருதம்.

காலம் வென்று ஞாலம் வென்று

"இருந்த பெரும் தமிழணங்கே!"..

என்றும் நீயே இங்கு 

வென்று காட்டி நின்று காட்டும்

செம்மொழிச் சீர்பெறும் தமிழணங்கே!

வாழி!வாழி! நீ நீடூழி வாழி நீ!


_______________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக