சனி, 13 மார்ச், 2021

"மனிதன் நினைப்பதுண்டு..."


https://www.youtube.com/watch?v=HvtLC3NvI4c



"மனிதன் நினைப்பதுண்டு..."



இந்தப்பாடலை

எத்தனையோ தடவைகள் கேட்டுவிட்டேன்.

சலிக்க வில்லை.

அலுக்க வில்லை.

நிறுத்த மனமே வருவதில்லை.

பாடலுக்கிடையே வரும்

அந்த இசை அமைப்பு..

அப்பப்ப!

உள்ளம் உருகி வழிந்தோடுகிறது.

இதயம் இன்னிசையில் நொறுங்குகிறது.

ஓ! எம் எஸ் வி அவர்களே

அந்த இசை நிரவல்களில்

கடல்கள் வாய் பொத்தி

அடங்கிப்போகின்றன.

செவி வழியே பிரபஞ்சங்கள் எல்லாம்

நுழைந்து சன்னமான ஒலியில்

சன்னல்களை சாத்திக்கொண்டு

குலுங்கி குலுங்கி அழுகின்றன.

அந்த அழுகையும் 

இனிமையோ இனிமை

கொடும் இனிமை.

அந்த கருவிகளை இசைத்த‌

இசைஞர்களுக்கு

இதயங்கள் இருக்கும் இடத்தில்

இருப்பது 

உருக்கம் உருக்கம் உருக்கம் மட்டுமே.

நிரந்தர தூக்கமாயினும் சரி

நிரந்தர மற்ற தூக்கமாயினும் சரி

ஓ! எம் எஸ் வி அவர்களே

எங்களுக்கு

அந்த உன் இசைத்துடிப்புகளே

இன்பத்தலையணைகள்!


______________________________________

ருத்ரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக