வெள்ளி, 19 மார்ச், 2021

"avathaar"


கடவுள் 

பத்து அவதாரங்கள் எடுத்தும் 

பத்த வில்லை

இந்த "அன்பைச்" சொல்ல.

தாயை சுமக்கும் ஒரு

தாயின் அவதாரம் அல்லவா இது!


*******************


கும்பமேளா யாத்திரை அல்ல அது.

சென்ற ஆண்டின் 

கொரானாமேளா யாத்திரை.

பாவம் 

ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை

இடம் விட்டு இடம் பெயர்ந்த‌

அந்த மக்களின் அவலக்காட்சியில்

ஒரு முதிய அன்னையை

சுமந்து கொண்டு நடந்த‌

அந்த பிள்ளையின் யாத்திரையே

ஒரு மகா அவதாரம்.

நம்ம அவதாரங்கள் எல்லாம்

அவதாரம் என்று எவர் சொன்னார் என்று

அந்த விஷ்ணுக்கள்

வெட்கித் தலைகுனிந்த காட்சி அது.


_____________________________________
ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக