சனி, 13 மார்ச், 2021

கவிதையைப்பற்றி......

 கவிதையைப்பற்றி......

____________________________‍‍‍‍‍_________

ருத்ரா



கவிதை எழுத இங்கே

காட்சிகள் வரிந்து கட்டுகின்றன.

சிந்தனைகள் 

முண்டியடித்துக்கொண்டு 

வருகின்றன.

இதோ வந்து கொண்டே இருக்கிறது

என்று

யானையும் குதிரையும் ஒட்டகமும்

கொட்டுகளோடு 

வருகின்றன்.

கோவிலுக்குள் குந்தியிருந்த 

கடவுளும் எழுந்து வந்து விட்டார்.

கன்னிக்குடம் உடைந்து விட்டது.

இதோ

சொற்கள் குமிழியிடுகின்றன என்கிறார்.

கவிதை பிரசவிக்கப்போகிறது என்கிறார்.

கவிதை பிறக்கிறது.

வர்ணம் பூசிக்கொண்ட 

பொய்களின் 

ஊர்வலம் தொடங்கி விட்டது.


___________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக