செவ்வாய், 30 மார்ச், 2021

போர்?

 


https://oosiyilaikkaadukal.blogspot.com/2016/09/blog-post_75.html


பாதை இல்லை.

பயணம் தெரிய வில்லை.

வரலாற்றுக் கந்தல்களில்

நம்மைச்சுற்றிய நூலாம்படைகளே

திசைகள் திசைகள் திசைகள்.

சிந்தனை தேங்கிய குட்டையில்

நம் கும்பமேளாக்கள்.

"நள்ளிரவில் சுதந்திரம் வந்தது

இன்னும் விடியவே இல்லை"

என்பதே 

இன்னும் நம் தேசியகீதம்.

யார் இந்த நான்கு வர்ணக்குமிழிகளை

நம் முகத்தில் உமிழ்வது?

நுரைக்கோபுரங்களில்

நம் தேர்தல் தோரணங்கள்

ஆடிக்கொண்டிருக்கின்றன.

சாதி மதங்களின் இருட்டில் தான்

நம் ஆரண்யகாண்டம்.

இந்த கம்பியூட்டரின் தீனி

நம் கனவுகளா?

நம் முதுகிலும் மார்பிலும்

ஆயிரம் அம்புகள்.

நம் நிழல்களே நம் மீது

ஆயுதங்கள் ஆயின.

இது என்ன குரு(ட்டு)ஷேத்திரபோர்?


_____________________________________

ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக