ஞாயிறு, 25 அக்டோபர், 2020

தொற்று

தொற்று

_________________________________________


கல்லூரி வகுப்புகள் இல்லை.

சந்திப்புகளும் இல்லை.

அவள் கண்களைக் கடைசியாய்க்

கண்டதே

தூண்டில் முள்ளாய்

வதைத்துக் கிடக்கின்றேன்.

புகைப்படம் இருந்தது.

சரியாய்த்தான் சொன்னார்கள் 

புகைப்படம் என்று.

பிரிவின் கொடுந்துயர்ப் 

புகை மூட்டத்தில்

ஒரு 

எரிமலைக்குழம்பால் அல்லவா

என்னைக்

குளிப்பாட்டுகின்றாள்.

காதல் எனும் தொற்றுநோய் உற்றபின்

கொரோனாவும் என்னிடம்

புறமுதுகிட்டு ஓடிச் சென்றது.


___________________________________ருத்ரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக