ஞாயிறு, 25 அக்டோபர், 2020

குரல்

 குரல்

____________________ருத்ரா இ பரமசிவன்


காலண்டரை மாட்ட‌

சுவரில் ஆணி அடித்தேன்.

மௌனமாய் ஒரு குரல்

ஆமென் என்று.

மனசாட்சிகள் தனியே

கழன்றுகொண்டு நிற்பது போல்

மிதந்து கிடந்தேன்.

கடவுளின் குரல் என்றாலும்

அது 

மனித அவலத்தின் ஒலி.

அந்தக் குரலின் கசிவில்

அந்தியின் சிவப்பு.

காலத்தின் மறைவா?

காலத்தின் தோற்றமா?

காலண்டர் தாள்கள்

பட படத்துக் கேட்டன


_____________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக