வெள்ளி, 15 ஜூன், 2018

ஞானப்பழம்

ஞானப்பழம்
================================================ருத்ரா

அடே! ஞானப்பழம் இங்கே வாடா.

என்னண்ணே!

எதுனாச்சும் வெசயம் உண்டாடா?

ஆமாண்ணே! இந்த "போலி இந்துத்வா" படுத்துற பாடு சகிக்கல.

என்னடா சொல்ற.

ஆமாண்ணே.உ.பி யில புனித யோகியார் ஆளுறாருன்னு சொல்றாங்க.ஆனா அங்கே "சிவனையே" ரோடுல போட்டு ஜல்லிய‌ பரப்பி சமாதி பண்ணிட்டாங்க.

சற்று வெவரமா சொல்லப்பா.

லஞ்சம் ஊழல்லாம் கெடயாதுங்கறங்க.ஆனா அங்க ஆக்ராவில்
பொதுப்பணித்துறை ரோடு போடும் போது ரோட்ல ஒரு நாய் தூங்கிகிட்டு கிடந்தது போலிருக்கு.இவங்க அதெல்லாம்  பத்தி கவலப்படாம‌ அது மேலேயே ஜல்லிய பரப்பி ரோடு ரோலர வச்சு அமுக்கி ரோட்டை போட்டுட்டாங்கண்ணே! கோ மாதாவுக்கு அந்த படுத்து படுத்துனவங்க இந்த  "பைரவ" சாமிய இப்டி கூழாக்கி கொன்னுட்டாங்களே! இந்த பைரவர் சிவன் அம்சம் இல்லையா? நீங்களே சொல்லுங்கண்ணே!

அடங்கொப்புரானே! அடே ஞானப்பழம்! அர அர மகாதேவான்னு
கன்னத்துல போட்டுக்கிட்டு போய்ட்டே இரு!

============================================================
செய்தி: 14.06.2018 ..தினமலர் நாளிதழ் (பக்.13).. மதுரை பதிப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக