புதன், 13 ஜூன், 2018

அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
==========================================ருத்ரா


அண்ணே இப்போ நகைச்சுவை மன்னன்னு
யாருக்குண்ணே பட்டம் கொடுக்கலாம்?

இதென்னடா புதுக்கேள்வி?

சும்மா சொல்லுங்கண்ணே.

என் எஸ் கே காலத்திலேருந்து ஆரம்பிச்சா காளி என் ரத்தினம்
புளிமூட்டை ராமசாமி  அப்புறம் சந்திரபாபு
டணால் தங்கவேலு தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன்
அப்புறம் நாம (செந்தில் கவுண்டமணி)  விவேக் அப்புறம்
நம்ம  க்ரேட் வடிவேலு ...
இப்டி போய்ட்டே இருக்குமடா..

அது அப்போ.. இப்போ சொல்லுங்கண்ணே
காமெடி சக்ரவர்த்தி யாருண்ணு?

தெரில்லேடா..

அதாங்க அது எஸ் வி சேகர் தாண்ணே..

என்னடா சொல்றே?

நாம சிரிக்க வச்சது சினிமாக்கொட்டாய்க்குள்ள தாண்ணே!
இவர் கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டிருக்கிறத பாத்தா
போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கோட்டை, ஜனநாயகம்  இன்னும்
அது இதுன்னு எல்லாமும் சிரிப்பா சிரிக்குதே அண்ணே.மோடிஜி கூட இத ரொம்ப..ரொம்ப ரசிச்சிக்கிட்டிருக்காரு போல...
இவரோட இப்போதைய "கள்ளன் போலீஸ்" விளையாட்டுக்கு
தனியாகவே "விதூஷக பத்மஸ்ரீ" கொடுத்திடலாம்ணே

அடே "ஞானப்பழம்" இப்போதாண்டா நீ ஒரிஜினல் "ஞானப்பழம்.

================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக