வியாழன், 14 ஜூன், 2018

செல்லும் ஆனா செல்லாது.

செல்லும் ஆனா செல்லாது.
=========================================ருத்ரா

வடிவேலு வாய் வைக்காத
இடமில்லை.
தடமில்லை.
இதற்கு
கனம் கனமாய் அத்தனை
சட்டப்புத்தகங்களையா
கரைத்துக்குடிக்கவேண்டும்?
ஆறு மாசம் ஏழு மாசம் என்று
மாதங்களை
உருட்டி உருட்டி
உதைத்துக்கொண்டிருக்க வேண்டும்?
இப்படி
"என்னத்த கன்னையா"க்களை
வைத்துக்கொண்டே
நம் வடிவேலு
ஆயிரம் இமயங்கள் உயரத்துக்கும்
சென்று
தீர்ப்பு சொல்ல‌
மரசுத்தியல்களை
நச் நச் என்று தட்டுவாரே!
அதெல்லாம் சரிதான்
நம் ஜனநாயகத்துக்கு
உயிர் இருக்கிறதா?இல்லையா?
மூக்கில் கைவைத்து
"நெஞ்சில் கை வைத்து" சொல்ல‌
யார் வருவார்?
அதோ
டாக்டர் வடிவேலு தான்
ஸ்டதெஸ்கோப்பை ஆட்டி ஆட்டிக்கொண்டே
நடந்து வருகிறார்...
அந்த "பேஷண்ட்" பற்றி சொல்ல.
"பிழைச்சிடுச்சு ..ஆனா பிழைக்கலையே"



==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக