வியாழன், 14 ஜூன், 2018

பொங்கிட்டாரு !ரஜனி!

பொங்கிட்டாரு !ரஜனி!
===========================================ருத்ரா

பொங்கிட்டாரு !ரஜனி!
அன்னிக்கு
"காக்கி மேலே கைய வச்சா "ன்னு
பஞ்ச்  விட்டபோது
காவியெல்லாம் கிளுகிளுப்பாச்சுது.
ஆனா இப்போ
"காலா" வெள்ளம்
கரையுடைச்சுப் பெருகுது.
மாப்பு
வச்சான்யா ஆப்பு!
திராவிட ராவணன்
ஆரிய ராமனுக்கு
ஆப்பு!
மூன்றுவர்ணத்தில்
நான்கு வர்ணம் செருகும்
சாணக்கியங்கள் எல்லாம்
சந்தைக்கு வந்து நாறிப்போச்சு.
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலருண்ணு
தன் குழந்தையைப்பார்த்து
உச்சி மோந்து உள்ளம் குளிர்கிறாள்
பாரதத்தாய்.
பரதன் என்பவன்
தமிழ்த்திணைகளின்
நெய்தல் தலைவன்.
அவ்னே அன்றைய
சிந்து வெளியிலிருந்து
கப்பல் ஓட்டி
உலகம் எல்லாம்
தன் உள்ளங்கைக்குள் திரட்டியவன்.
தமிழனே உருவாக்கிய‌
புதுத் தமிழ் எனும்
சமஸ்கிருதம்
பரத நாட்டை "பாரத நாடு" ஆக்கியது.
யார் சொன்னது
ரஜனி பரட்டை என்று?
பா.ரஞ்சித்தின்
"சிகை அலங்காரத்தின்"
சிகரத்தில் ஏறி
அவர் கரிகாலனாய்
மீண்டும் இமயத்தில் தமிழ்க்கொடி
ஏற்றியுள்ளார்.
சினிமாவின் பொம்மை விளையாட்டாய்
இது
உங்களுக்குத் தோன்றலாம்.
இதையும் நீங்கள் கற்பனையாய்
ரசிக்கலாம்.
ராஜாக்களும் தமிழிசைகளும்
குருமூர்த்திகளும்
"எக்ஸார்சிஸ்ட்" படத்தில் வரும்
குழந்தையைப்போல‌
உடம்பிலிருந்து
தலை கழன்று
சுற்றிக்கொண்டே
கலர் கலராய் வாந்தியெடுப்பதை!
அன்னிக்கு கொடுத்தேன் இனிமா!
இன்னிக்கு கொடுக்கிறேன் சினிமா!
ஹா..ஹா..ஹா
இது எப்டி இருக்கு..
காலா கலர்ப்படம்
"செம வெயிட்டு"

==============================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக