சனி, 8 ஏப்ரல், 2023

டிங்கரிங்க்

 

டிங்கரிங்க்

________________________________________‍


ஒரு சிறுகதை

ஏதோ ஒரு நிகழ்வு

புளிச்சென்று 

துப்பி விட்டது போல் தான்.

போங்கடா

நீங்களும் உங்கள் வாழ்க்கையும்

என்று தான்

நம் முகத்தில் அது கரி பூசும்.

அது கரியல்ல.

நம் கண்கள் எப்போதும் 

பூட்டிய சன்னல்களாக‌

பார்வைகள் செத்த ஒரு சவப்பெட்டியை

வைத்து சிமிட்டிக்கொண்டிருக்கும்

ஒரு மரணத்தூக்கத்தை

மறுவிழிப்புக்கு

அடித்து நொறுக்கும்

எழுத்துக்களின் ஆதங்கமும் ஆவேசமும் தான்

அது.

புதுமைப்பித்தனும் 

ஜெயகாந்தனும்

ஒன்றுக்கும் உதவாத அந்த‌

தகரடப்பா பிரம்மத்தை

டிங்கரிங்க் செய்ய வந்தவர்களே.

இப்போதாவது உங்கள்

முகம் தெரிகிறதா பாருங்கள்!

____________________________________________________

சேயோன்.








அகழ்நானூறு 35 (வரைவு)

 



ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,

மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்

இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,

அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்

காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், 5

ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்

புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்

மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு

அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை

வார் கோல் எல் வளை உடைய வாங்கி, 10

முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்

எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?  



மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; தாம்¢ வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம்¢ வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; அங்ஙனமாக என்னை நோக்கி "நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக!" என்று கூறி; புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ?


தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - குன்றியனார்

பாடல் 239. நற்றிணை


அகழ்நானூறு 35

_____________________________________________________

சொற்கீரன்.


அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்

ஞான்ற பழத்து தீக்குரல் அன்ன 

ஞாயிறு தூங்கு குடதிசைக் கூந்தல்

அவள் விழி ஒப்ப கனன்று நோக்கும்.

ஆறு சுரத்த நெடுங்காடு இறந்தோன்

பொருள்வயின் அன்றொரு கற்றைத்திங்கள்

அவளொடு தழீஇய ஒல்லா ஊழின் 

அஞ்சுவரு இன்பில் முள்ளின் மூசு

காழ்த்த மரத்திடை ஞாழல் நறுவீ

புல்லிடை ஊரும் பூதங்காற்றில் 

கல்லிடை எல்வீழ் கவின் மலி காட்சி

கவிழ்ந்து இமைகள் அவிழ்க்கும்

விழியாள் கீற்றென மின்னல் எறிந்தாள்

அவன் ஒருதனி நீளிடை  மறித்து.

ஒப்பீடுகள்

 

ஒப்பீடுகள்

___________________________________________________



லோகேஷ் கனகராஜும் 

மணிகண்டனும்

கமல்ஹாசனை தங்கள்

கேமிராவின்

கலைடோஸ்கோப்பில் 

திருப்பி திருப்பி பார்த்து

உடைந்து நொறுங்கி குலுங்கி குலுங்கி

வண்ணம் காட்டும் 

அந்த நடிப்பின் தருணங்கள்

மிக மிக அற்புதமானவை என்பதில்

யாருக்கும் இரண்டாம் கருத்தே இல்லை.

40 50 களில்

50 60 களில்

70 களில்

இப்படித்தான்

எம் கே டியும் பி யு சின்னப்பாவும்

சிவாஜியும் எம் ஜி ஆரும்

அவரவர் இமயங்களில் கொடி நாட்டினார்கள்.

ரஜனிகாந்தின் அந்த அட்டை இமயத்தின் சிகரம்

மிக மிக உயரத்தில் தான் இருக்கிறது.

இப்போது விஜயும் அஜித்தும்

ரசிகர்களுக்கு மிக மிக ருசியான‌

பாப்கார்ன் பொட்டலங்கள் தான்.

இருப்பினும் இன்றுவரை

சர்வ தேச விருதுகளின் கிட்டங்கிகளை

வியப்பால் இமை விரிய வைத்துக்கொண்டே இருக்கும்

திரைக்கதைகளை

உயிரோட்டமாகத்தந்த‌

சத்யஜித் ரேய் அடூர் கோபாலகிருஷ்ணன்

மற்றும் கிரிஷ் கர்னாட்

போன்ற திரை ஆளுமைகள்

தந்த‌

அந்த மூழ்கடிக்கமுடியாத ஆழங்களின்

சமுதாயத்தினவுகளையும் தீர்வுகளையும்

நாம் இன்னும் தரிசிக்கவில்லை

என்பதே

ஒரு உறுத்தல்காடுகளில் 

உலவிக்கொண்டிருக்கும் 

அந்த நிழல் ரோஜா!

இந்த ரோஜாவிலிருந்தும் 

தெறித்திருக்கின்றன சில ஒளிமகரந்தங்கள்.

வெற்றிமாறனுக்கு 

வெறும் தூசியும் துரும்பும் போதும்

சமுதாயவலியின் ரத்தம் வடியச்செய்ய.

ஆனால்

சூரியை வைத்து அந்த போலீஸ் லத்தியில்

சொட்டு சொட்டாய் உதிர்ந்த‌

ஒரு சூரியபிழியலை

மக்களின் வலியாய் வடித்திருக்கிறார்.

விடுதலைக்கு இப்படியொரு 

புதிய பரிணாமமா?

இருப்பினும் இந்த 

ஒப்பீடுகள் இன்று வரை

எழுதவும் படிக்கவும்

மிக மிக சுகமே.


____________________________________________________

சேயோன்





பேனா?

 யாருக்காக அழுதான்?

___________________________________


ஜெயகாந்தன் வீசிய 

இந்த கேள்வித்தீ

எந்த திரியிலிருந்து 

பற்ற வைக்கப்பட்டது

என்று இன்னும் எவரும் 

புரிந்திருக்க முடியாது.

வெறும் நரம்புமண்டல மனிதனுக்கும்

சமுதாய மனிதனுக்கும்

இடையே உள்ள அந்த பள்ளத்தாக்கு

அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கு அல்ல.

மனிதப்பிறப்பு

கடவுளின் வரம் என்று

கொண்டாடும்போது

அதன் அழுகையின் 

மொழி பெயர்ப்பில்

தத்துவத்தின் சிலந்திவலகள் 

ஆயிரம் ஆயிரம்.

யாருக்காக அழவேண்டும்?

யாருக்காக சிரிக்க வேன்டும்?

என்று திசைகள் புரியாத‌

ஒரு சூன்யப்பிழம்பு தான்

கர்ப்பத்தில் கரு பிடிக்கிறது.

உதைத்துக்கொண்டு பிறக்கிறதே!

பிறப்பதே போராட்டமாகி

போராட்டமே பிறப்பு ஆகும்

இந்த புதிர் தான்

அழுகையாயும் சிரிப்பாயும்

இந்த சமுதாயக்கண்ணாடியில்

முகம் பார்க்க வருகிறது.

அது தானே எல்லா மதங்களுக்கும் மதம்.

எல்லா கடவுளுக்கும் கடவுள்.

அவன் சிரிக்கிறானா? அழுகிறானா?

பேனா ஒன்று தான்.

அது விறைத்து நின்று

சோம்பல் முறித்துக்கொண்டதில்

பழமைவாத எலும்புகள் நொறுங்கிப்போகின்றன.

யார் அந்த பேனா?

ஜெயகாந்தனா? கலைஞரா?

அது பிரதிபலிக்கும் கடலே

இங்கு சமுதாய எழுச்சி!


_______________________________________________________

சேயோன்.

வியாழன், 6 ஏப்ரல், 2023

ஒரு ரோஜாவை கையில் ஏந்தி

 


ஒரு ரோஜாவை கையில் ஏந்தி

சுழற்றி சுழற்றி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதன் அடுக்கு அடுக்கான 

இதழ் வண்ணமும் அழகும்

என் மௌனத்தையே மகரந்தங்களாய்

சிதறடித்து என்னுள்

சொற்சிற்பங்கள் செதுக்கின கவிதை என்று.

நேரம் செல்ல செல்ல 

நான் எங்கோ எதிலோ கரைந்து போனேன்.

அது உருமாற்றமா?

தருணங்களின் கரு மாற்றமா?

எப்படியோ தாவிவிட்டேன்.

காலத்தின் கோடி கோடி அடுக்குகள்

ஒரு புள்ளியாய்

என் மூக்கு நுனி பட்டாம்பூச்சி போல்

சிறகுகளில் "சாமரம்"வீசியது.

திடீரென 

பால்வெளி மண்டலங்கள் ஆயிரம் ஆயிரமாய்

உருண்டு திரண்டு

சிவப்பாய் செம்பிழம்பாய்

சுழன்றது.

அதுவும் ஒரு உயிர்ப்பின் நெருப்பா?

அப்பாடா!

காலவெளிப்பயணத்தின் புழுக்கூடு

என்னை துப்பி விட்டது.

மீண்டும் புல்வெளியில் விழுந்தேன்.

கைவிரல்கள் ரோஜாவின் இதழ்களை

இழந்து போயிருந்தன.

அந்த பூவின் காம்பைப்பிடித்திருந்த 

இடத்தின் நுனியில்

அந்த முள்

ரத்தக்கசிவோடு

கடு கடுத்தது!

என் அருமை ரோஜாவே!

உன் அழகை இப்படியும்

ஒரு ரத்தக்கசிவில் 

மொழிபெயர்த்து முத்தமாக்கி

அண்டம் விட்டு அண்டம்

பெயர்த்து விடமுடியுமா என்ன?


___________________________________________________‍

சேயோன்.

புதன், 5 ஏப்ரல், 2023

நம் "தம்மிழ்".

 நம் "தம்மிழ்".

___________________________________________

சொற்கீரன்.



வரலாறு என்றால்

மீனும் பன்றியும் சிங்கமும்

வந்து மறுபடியும் 

மனிதனை வெறும் விலங்கு தான்

என்று சொல்வதா?

வானத்திலிருந்து வேதம் வந்தது

என்று சொல்வதெல்லாம்

சோமக்கள் காய்ச்சும்போது

வந்த நொதிப்பு தானே.

பாரசீகத்து அவெஸ்தா மொழிப்பாடல்கள்

ரீங்காரம் செய்தது தானே 

ரிக் வேதம்.

வேய்தம் எனும் அந்த 

தர்ப்பைப்புல் கூரையின்

ஒவ்வொரு கீற்றும்

இரவல் இரைச்சல்களே.

சிந்து ஆறு என்பதே

தமிழ் ஆறு தான்.

மண்ணில் வேர்பிடித்த தமிழ்

உலகம் எல்லாம் பரவி ஒலிக்கும்

நாவு ஆனது.

நாவின் அசைவே லேங்குவேஜ் ஆனது.

பேசு என்பதே பாஷை ஆனது.

தமிழ் தந்த உலக ஒலிப்புகளே

செயற்கையாய் செய்த சமஸ்கிருதம் ஆனது.

ஒரு ஒலிக்கு ஒரு எழுத்தே போதும்

என்று உலக ஒலிப்புகளை 

கோர்த்த தமிழ் 

இடத்துக்கு இடம் என்று 

பல ஒலிப்புகளை வகைபிரித்தது.

ஆனால் வேர் மொழி தமிழ்

அந்த நான்கு வகை ஒலிப்புகளையும்

ஒன்றாய் தன்னுள்

கிளைத்து செழித்து அடர்ந்து அகன்று

ஒலி பரப்பிக்கொண்டிருக்கிறது.

வேர் மறைந்து தானே உயிர்த்துக்கொண்டே இருக்கும்.

இந்த கிளைகளும் இலைகளுமே

பல் ஒலிகளை சல சலப்பு செய்து கொண்டிருக்கும்.

இந்த உயிர் மூச்சை 

தம் பிடித்து கொண்டிருப்பதே

நம் "தம்மிழ்".


_____________________________________________________________


அகழ்நானூறு 34

 அகழ்நானூறு 34

______________________________________

சொற்கீரன்



எல்லை போகிய புல்லென் மாலை யென‌

பேயன் வரித்த அகநானூற்று அகம் அகழ்ந்த 

பாடல் கயத்து பண்ணுடை இலஞ்சி 

களித்தனன் யான் அதை கவித்தனன் ஈண்டு

சொற்குடை ஏந்தி சொல்லலும் புகுந்தேன்.

காதலி ஐம்பால் கதுப்பின் தொகுப்பும் 

வால் திரைக்கீற்றின் சில்லெனும் பகுப்பும்

வான் மறைத்து மேவிய நகை வெண் திங்களாய்

நோதல் செய்த நீர்மையில் அவனும் 

புல் உளைக்கலிமா கொய்சுவல் ஆல‌

பரி சால‌ உகள காலிடை போழ்ந்தும்

நுண்வரி எழுதி அவிழ்சிறை முல்லை

தாது நிரவியத் தகையவன் விரைந்தான்.


_____________________________________________________