செவ்வாய், 1 செப்டம்பர், 2026

வண்ணதாசன் அவர்களே./01.09.2026

வண்ணதாசன் அவர்களே.

"நான் எழுதுவது கடிதம் அல்ல.."

என்று இனிய தருணங்களை

அந்த உதடுகள் இசையமைத்துத் தந்ததை

உணர்ந்திருப்பீர்களே!

அந்த பிரபஞ்ச இனிப்பின்

பிய்ஞ்ச சிறகுகள் தான் அவை.

________________________________

சொற்கீரன்

------------------------------------------------------------------------------(1)


வண்ணதாசன் அவர்களே!

நம் ஊருக்கு ஊர்

முக்குக்கு முக்கு

"வெயிலுகந்த" அம்மன்களின்

அன்பான மடிகள் உண்டே.

அந்த வெப்பமும் குளிச்சியும் தானே

அன்னையின் மடி.

அந்த வேப்பம் நிழலில் 

காக்கை பிதுக்கிய‌

வேப்பம் பழ இனிப்பின்

வரிகளே 

மண்ணில் வீசிய கவிதைகள்!

_________________________________________

சொற்கீரன்.

__________________________________________(2)


 
 
தீவிர ரசிகர்
துவைத்து துவைத்து
அலசிக்கொண்டு வந்து
கம்பிக்கொடியில் தொங்கிக்
கொண்டிருந்தன வயதுகள்.
வெயிலின் வருடலில்
வாழ்க்கைகள்!
_____________________________________
சொற்கீரன்

ON VANNADHASAN KAVITHAI  03.09.2026

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக