செவ்வாய், 21 ஜூன், 2022

செல்வி கீர்த்திராஜேஷ் பூப்புனித நீராட்டு விழா வாழ்த்து மடல்.

 செல்வி கீர்த்தி ராஜேஷ் பூப்புனித நீராட்டு விழா வாழ்த்து மடல்.!

============================================================

============================================================

============================================================

27.06.2022


செல்வி கீர்த்தி நல்லாள்

செந்தாமரையென 

பூத்து பொலிந்த 

மங்கலம் சிறக்க

நீடூழி வாழ்க! அவள்

நீடூழி வாழ்க! 


பூப்போல் நகை செயும் அவள்

புன்னகை கோடி பெறும்.

அன்பெனும் அகல் வான்

ஒளிரும் அவள் மாண்பு

கோடி கோடி கோடி பெறும்.

அறிவின் புத்தொளி அவள்

ஆளுமையாகும் இந்த‌

உலகம் கூட அவள்

உரை சொல் கேட்கும்.

விரல் நகம் பூசும் அவள்

வண்ணம் கூட ஒரு

எண்ணம் காட்டும் அதில்

இவ்வுலகம் ஆளும்

திண்ணம் காட்டும்...அவள்

பந்து விளையாடினால் அது

பூப்பந்து அல்ல!

புயலே ஒரு குமிழி பூத்து

அவள் சொல்படி கேட்கும்.

அவள்

விருதுகள் குவித்த 

விந்தை கேட்டால்

ஒலிம்பிக் சுடரும் 

கை நீட்டி வாழ்த்தும்.

குறுக தரித்த அவள் சொல்லே

இங்கு இனிமையின் நல்ல‌

இலக்கியம் ஆகும்.

அவள் 

உதிர்க்கும் சொற்களின்

குறுந்தொகைக்குள்ளே 

கலித்தொகை காட்டும்

களித்தொகை உண்டு.

எட்டுத்தொகையுள் ஒரு 

எட்டாத்தொகையும்

செறிந்து காட்டும் அவள்

மங்கலம் அணிநலம்

பொங்கிடும் என்றும்.

மழலையிலிருந்து சிறுபூவாகி

பெண் எனும் பெருமையின்

பெரு மகிழ்வின் வெள்ளம்

பெருகிட நின்றாள்..அவள்

வளம் பல பெற்றிட‌

வாழ்த்திடுகின்றேன்!

வாழ்த்திடுகின்றேன்!

அவள்

பூப்பு நீராட்டு பொன்விழா சுடர‌

வருகை தந்தோர்க்கு எங்கள்

நன்றி!நன்றி!நனி மிக‌ நன்றி!


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍============================================



அன்புடன் வாழ்த்தும் 

ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

________________________________

27.06.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக