புதன், 8 ஜூன், 2022

தெளிந்தது

 தெளிந்தது

______________________________________ருத்ரா



நம் கனவுகள்

பூதங்களைப்போல்

குமிழிகளை ஊதுகின்றன.

எங்கிருந்தாவது 

ஒரு முள் வந்து குத்திவிடுமோ

என்ற பயம்

அந்த குமிழிகளைவிட'

பெரிய குமிழிகளாய்

உள் கிடப்பது கலக்கம் ஏற்படுத்துகிறது.

ஒரு ரோஜா

வானம் விம்ம விம்ம 

பெரிதாய் அருகில் வந்தபோது

மகிழ்ச்சி ஒரு மாபெரும் கொப்புளம் தான்.

ஆனால்

அதுவும் அடியில் முள் தாங்கி அல்லவா

வருகிறது?

எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்

கவலை வேண்டாம்...

என்று ஒரு மகா குமிழி...

ஆயிரம் ஆயிரம் பிரபஞ்சங்களை

லாலி பாப்புகள் போல்

கவ்விக்கொண்டு

இனிமை தூவி வருகிறது....

கடவுள் என்று.

அந்த பெரிய பலூன்

என்னை ஒரு மெல்லிய நிழலுக்குள்

அமர்த்தியது.

அப்பாடா!

ஒரு நிம்மதிப்பெருமூச்சை உதிர்த்தேன்.

அடுத்த நானோ செகண்டில்

அந்தக்கடவுளும் 

"படார்" ஆனார்.

அவர் சொற்கள் நிறைய

கீழே இறைந்து கிடந்தன.

கூட்டி வைத்துப்ப்டித்தேன்.

"நான் ஒன்றுமே இல்லை என்று 

சொல்லவே

உன்னிடம் வந்தேன்."

அந்த படார் என்பது 

இப்பொது புரிந்தது.

என் பயமும் புரிந்தது

தெளிந்தது.


______________________________________________

12.10 A M on 09.06.2022




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக