ஞாயிறு, 12 ஜூன், 2022

ஒரு நாவலின் அனாடமி

 


ஒரு நாவலின் அனாடமி

_________________________________‍ருத்ரா


"அவன் என்ன செய்வது என்று

தெரியாமல் 

கைகளைப் பிசைந்து கொண்டிருந்தான்.

ஆனால் பிசையப்பட்டுக்கொண்டிருந்தது 

அவன் மனமே.

அப்படி என்ன சொல்லி விட்டான்.

அவள் விலுக்கென்று

ஒன்றும் சொல்லாமல் 

ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு

போயே போய் விட்டாள்.

இது வழக்கம் தான்.

அப்புறம் "ஃபோன் வரும்".

ஆனால் இது அப்படியா? என்று தெரியவில்லை.

அவனுக்கு வயிறு கலங்கியது.

இதயம் இருக்குமிடத்தில்

இதயம் எங்கோ போய்விட்டதாக‌

அவன் உணர்ந்தான்.

அவன் என்ன சொன்னான்?

திருப்பி உள்ளுக்குள்

"ரீ வைண்டி"னான்.

எதுவுமே தவறு இருப்பதாக 

அவனுக்குத் தெரிய வில்லை.

............."

இதற்கு மேல் என்ன எழுதுவது என்று

அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

இந்த வரிகளுக்கு அவனுள் விழுந்த விதை

எது?

எங்கே?

எப்போது?

என்பதும் அவனுள் பொறி தட்டவில்லை.

அரை குறையாய் எழுதப்பட்ட‌

காகிதங்கள்

கசக்கி எறியப்பட்டன.

இத்தனைக்கும்

அவன் இன்னும் "காதலுக்குள்"விழவில்லை.

அந்த கருங்குழி இன்னும்

அவனது ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பில்

விழவில்லை.

காதல் என்ற கற்பனையை

பிசைந்து மண்பாண்டம் போன்று

ஒரு மனப்பாண்டத்தை 

உருவாக்குவதற்குள்

அவனுக்கு போதும் போதும்

என்றாகி விட்டது.

அந்த கட்டுக்காகிதங்கள்

காற்றில் பறந்து சிதறின.

என்ன செய்யப்போகிறாய்?

என்று சினிமாவில்

ஒரு கதாநாயகன் இப்படித்தான்

சிலுப்பிக்கொண்டு பாடுவான்.

"வெண்ணிலா வெளிச்சம் 

கிண்ணத்தில் விழுந்து..."

அந்த இசை அவனை

சுருட்டி சுருட்டி உள்ளே இழுத்தது.

மூச்சுத்திணறியது..

"அய்யோ"என்றான்."

"என்னடா? கனவா?

பேந்த பேந்த முழிக்கிறாய்."

அம்மா எழுப்பினாள்.


_________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக