செவ்வாய், 7 செப்டம்பர், 2021

துடைத்துகொள்ளுங்கள்


மிக மிக உயரமாக 

சிலை செய்து கொண்டு

அவரை தரிசனம் செய்ய

ஊர்வலம் சென்றார்கள்.

காக்கா ஒன்று உயரமாய்

பறந்த போது 

அவர்கள் மீது 

எச்சம் இட்டுச்சென்றது.

பிரசாதம் அருளுங்கள்

என்றார்கள்.

அப்போதே போட்டு விட்டேனே

துடைத்துகொள்ளுங்கள் 

என்றார்

கடவுள் சிரித்துக்கொண்டே.

____________________________

ருத்ரா






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக