புதன், 1 ஜனவரி, 2020

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

========================================ருத்ரா

இதோ ஒரு  புத்தாண்டு!


எப்போதும்

அந்த நள்ளிரவுக்கோளம்

உடைந்து

கல கலவென்று

சிரிப்புகளை  சிதறுவது தான்

இது.


வெளிச்சத்தை

ஊசி மழை ஆக்கி

இந்த இருட்டைக் கந்தலாக்கிக்கொண்டு

கண் விழிப்பது தான்

இது.


காலண்டர் தாள்களில் எல்லாம்

கன்னிக்குடம் உடைத்து

அந்த காலக்குழவியை

நம் கையில் ஏந்தக்கொடுப்பது தான்

இது.


அந்த திருவேங்கடத்தான்

"போதும்

அந்த ஸ்லோகங்களை

நிறுத்திக்கொள்
.
"ஹேப்பி நியூ இயர்" சொல்"

என்கின்றானே.

அதனால் தானே

லட்சம் லட்சமாய்

கியூக்களில் நிற்கிறார்கள்

இவர்கள்

"ஜனவரி ஒன்றாம் தேதியை"

தரிசனம் செய்ய!



ஆங்கிலம் என்ன?

தமிழ் என்ன?

சமஸ்கிருதம் என்ன?

எல்லா மொழியும்

கலந்து பிசைந்த

மன மத்தாப்புகளின்

நம்பிக்கை ஒளிப்பிழம்பு

இது.


தேவகுமாரன் தவழ்ந்து வந்து தந்த‌

புதிய சமாதானம்

இது.



சிலுவைகளும்

துப்பாக்கிக்குண்டுகளும் கூட‌

வருடங்களின் பிழம்பு

எனும் செங்கடல் பிளந்து தந்து வந்த‌

அந்த ஒளிக்கீற்று முன்

சுருண்டு தான் கிடக்கின்றன.



விண்ணை இடிக்க

கோவில் எழுப்பும்

வெறி மிகுந்த கடப்பாரைகளை

ஏந்துபவனே.


இந்த மனிதக்கபாலங்களை

அடித்து நொறுக்கியா

உன் கட்டுமானத்தை

தொடங்கப்போகிறாய் ?



பார்!

உன் கைகள் எல்லாம்

ரத்தம்.

ஆம்.அந்த‌

ராமன்களின் இதயம்

கூழான இத்தச்சேறு அது.


உனக்கும்

எங்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


===============================================



1 கருத்து:

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக