ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஜெய்ஹிந்த்!

ஜெய்ஹிந்த்!
===============================================ருத்ரா

இந்திய மண்ணின்
மைந்தர்களே!
அடிமை விலங்கை நொறுக்கி
விட்டோம் என்று
தெருவெல்லாம் 
அலங்கார ரதங்கள்
ஓட்டிக்களித்தீர்கள்.
ஆனாலும் 
பழைய நான்கு வர்ணம்
பூசிய 
விலங்குகளையல்லவா
கைகளிலும் கால்களிலும்
பூட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
கடவுள் எனும்
மயிற்பீலி போன்ற உணர்வு
உங்களை 
வருடுவதில் உங்கள்
மனங்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.
அதே மயிற்பீலிகள்
பெரும்பாரமாய்
செத்துப்போன‌
சாதி மத வேதாளங்களாய்
இன்னும்
உங்களைப்பிய்த்து தின்னும்
நிலையை 
நீங்கள் அனுமதிக்கலாமா?
குடியரசு விழா என்று இந்த‌
மத அரசு மத்தாப்புகள்
உங்களை 
எரித்துவிடப்பார்க்கும்
கொடுமைகளை அனுமதிக்கலாமா?
கணினிப்பொறிகளை 
தட்டிய உங்கள் விரல்களில்
சமூக நீதியை.. 
மானுட சம நீதியை...
அடித்து நொறுக்கும்
சம்மட்டிகள் 
எப்படி ஜனித்தன?
என்று
இன்று நீங்கள்
யோசிக்கா விட்டால்
நாளை 
ஓ மானுடநீதிப் பூக்களே
நீங்கள்
அடிமைக்கொட்டில்களில்
அடைக்கப்படுவீர்கள்.
ஆம்!
விடியல் சுதந்திரம் 
இருட்டிவிடும் இந்த அபாயத்தை
உங்கள் 
சிந்தனைச்சுடர் ஏந்தி
வெளிச்சம் பாய்ச்சத் தயார் ஆகுங்கள்.
ஜனநாயகத்தின்
உங்கள் குரல்களை நெறிக்கும்
இந்தக்கூச்சல்களை
குப்பையில் தள்ளட்டும்
உங்கள் இடி முழக்கக்கங்கள்!
"ஜெய்ஹிந்த்"

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக