வியாழன், 30 ஜனவரி, 2020

தூது

 தூது
===============================================ருத்ரா



"என்னைப்பிளந்து
என் மனசைப்பிசைந்து
காற்றாக்கி 
தூசாக்கி உனக்கு
தூது விட்டிருக்கிறேன்.
வகுப்பு பாடம் 
நடந்து கொண்டிருக்கும்போதும்
உன் மேஜையில் வந்து
படிந்த அந்த தூசியை
தட்டி விட்டு 
எதை கவனித்துக்கொண்டிருக்கிறாய் நீ?"
காதலன் நெஞ்சம்
கலங்குகிறது.
"பாடம் என் காதில் ஏறவில்லை.
உன் குரலுக்கு ஏங்கி
என் மௌனத்தை உன் மீது
கண்ணுக்குத்தெரியாத  ட்டு
எதைக்கேட்டுக்கொண்டிருக்கிறாய்
அந்த 
பேராசிரியரின் கூச்சலில்."
காதலியின் கூர்மையான 
ஏக்கம் இது.

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக