வியாழன், 16 ஜனவரி, 2020

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
=================================================ருத்ரா

இஞ்சியும் மஞ்சளும் கரும்பும்
முத்தமிழ்க் கலவையாகி
தமிழ் உள்ளம்
இங்கு பெரும்பொங்கல் ஆகி
சுவை கூட்டும்
"களித்தொகை"ப் பாடலென‌
சொல்கின்றேன்
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எங்கிருந்து தொடங்குவது
நம் தமிழின் ஆண்டை?
வள்ளுவன் ஆண்டே போதும்
உள்ளுவோம்
வாழ்வின் செம்மை தன்னை.

முன்னைப் பழம்பொருளுக்கும்
முன்னைய தாய்
பின்னைய புதுமைக்கும்
புதியதாய்
கொண்டாடுவோம்
நந்தம் தமிழ் ஆண்டை!

தமிழன்
கல்லைக்கண்டு உள்ளே
கனலைக்கண்டான்.
சொல்லைக்கண்டான்
அறிவின்
எல்லை கண்டான்.
உலகின் ஒளியைக்கண்டான்.
அந்த
கல்லாண்ட தமிழனே
எல்லாம் கண்டான்.

கடல் என்றால்
தடை அல்ல.
எல்லாம் கடத்தலே
இங்கு வாழ்க்கை.
அந்த வெள்ளத்தையும்
கட‌
என்று
துணிந்தான்
கடந்தான்.
தடுப்பதை
கடத்தலே அவனுக்கு
கடல் ஆயிற்று.
அது அவன் எழுதிய
முதல்
அலை படு கடாம்.

திரைகளோடு
திரண்டுநின்ற தமிழனே
திரையிடத்தான் ஆனான்.
திரைவிடத்தமிழின்
கூர்மையே இன்று
திராவிடம் ஆனது.

தமிழ் ஆண்டு
தொடங்கியது
இந்த‌
கல்லையும் கடலையும்
வைத்து தானே.

தொன்மைத்தமிழின்
இந்த
தமிழ்ப்புத்தாண்டுக்கு
நம் வணக்கம்.

எல்லோருக்கும்
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக