செவ்வாய், 28 ஜனவரி, 2020

இனித்த மொழி

இனித்த மொழி
================================================ருத்ரா


ஆடு 
புல்லை மேய்ந்து கொண்டிருந்த‌
திடல் அருகே
ஒரு பெருமாள் கோயில்.
காண்டா மணியின் ஓசை
அந்தப் புல்லையும் 
ஆட்டையும்  
கசக்கி எறிந்தது.
பாம்பு படுக்கையில் கிடந்த‌
பர‌ந்தாமனுக்கும்
படு எரிச்சல்.
சற்று நேரத்தில்
ஆரம்பித்து விடுவார்கள்...
இந்த ஊளை சஹஸ்ர‌நாமங்கள்
எவனுக்கு வேண்டும்?
பெருமாள்
அந்த ஆட்டுக்கு அருகில்
புல்லில் போய் படுத்துக்கொண்டார்.
ஆடு "மே..மே" என்று
அர்ச்சனை செய்தது.
தமிழின் திருவாய் மொழியாய்
அந்த இடமெல்லாம் இனித்தது.
எறும்புகள்
வரிசை வரிசையாய் வந்து
தரிசனம் செய்தன‌
எந்த ஸ்பெஷல் ஆயிரம் ரூபாய்ச்சீட்டும்
இல்லாமல்.

============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக