வியாழன், 16 ஜனவரி, 2020

விழிமின் தமிழர்களே! விழிமின்!

விழிமின் தமிழர்களே! விழிமின்!
===========================================================ருத்ரா 


இருபத்திஒன்றாம் நூற்றாண்டை
மகுடம் சூட்டியிருக்கிற 
இளைய மன்னர்களே!
சிந்தனையின் சுடரேந்திகளே!
எண்ண விளிம்புகளில் 
மின்னல் கீற்றுகள் 
நெளிய வேண்டிய இடங்களில் 
இந்த அரிதார 
நூலாம்படைகளையா 
அடைய விடுவது?
இமயச் சிகரத்தில்  
"வில் "பொறித்த வீரமா 
இந்த ஊசிப்போன 
"நூல்"களின் 
"துக்ளக்" "தர்பாரு"க்குள் 
பொம்மைகளாய் 
நசுங்கிக்கிடப்பது?
வரிசையாய் வந்த 
சினிமா நடிகரும் நடிகையும் 
பதித்த அடிச்சுவடுகளில் 
கண்டதெல்லாம் 
உங்கள் அடிமைச்சுவடுகளே!

கிருஷ்ணகிரி எல்லையோரத்தமிழன் 
என்று 
முழங்கிக்கொண்டு வரும் 
இந்த சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் 
வடக்கத்திய 
கிருஷ்ணர்களுக்கும் அர்ஜுனர்களுக்கும் 
அல்லவா 
இங்கே வந்து 
"சப்பளாக்கட்டைகள்" அடிக்கிறார்கள்.

மானுட சமூகநீதியை 
வர்ணாசிரமக் குப்பைத்தொட்டியில் 
வீசிடவே 
விரல் முத்திரை காட்டி 
மேடையில் வீராவேசம் காட்டுகிறார்கள்.
கருவிலேயே நூலின் மார்போடு 
பிறந்தவர்களாம் 
இந்த "பிரம்ம புத்திரர்கள்".
மற்ற 
தொண்ணூற்றேழு சதவீதமும் 
சாக்கடைப்புழுக்களாம்.

தமிழர்களே! தமிழர்களே! தமிழர்களே! 
உங்கள் காலின் கீழ் 
இருப்பது வெறும் மண் அல்ல!
அது  உங்கள்  
எரிமலை லாவாவின் 
நாளத்துடிப்புகள் என்று 
எப்போது உணருவீர்கள்?
விழிமின் தமிழர்களே! விழிமின்!

=======================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக