ஞாயிறு, 5 ஜனவரி, 2020

கள்ளிக்காட்டில் ஒரு ஆருத்ரா தரிசனம்.



24 மார்., 2014, 
SDC12156.JPG


24 மார்., 2014, 


கள்ளிக்காட்டில் ஒரு ஆருத்ரா தரிசனம்.
=================================================ருத்ரா இ.பரமசிவன்

எட்டு கோணலில் நின்ற‌
எண் குணத்தானே இங்கு
இது என்ன முள்ளின் கூத்து?
கள்ளிக்காட்டில் ஒரு ஆருத்ரா தரிசனம்.
கள்ளிக்காட்டில் ஒரு கனக சபையா?
இங்கே எப்படி என்றேன்?

அமெரிக்காவின்
"அரிஸோனா கள்ளிச்சபையும்
எனக்கு ஒரு சிதம்பரம் தான்.
ரகசியம் ஏதுமில்லை.
ஐந்து பூதத்துக்கும்
ஐந்து சபைகள் வைத்தேன்.
ஆறாம் பூதம் ஒன்று
இங்கு தான் உண்டு என்று கண்டேன்.
கணினி பூதம் அது
அதற்கோர் சபையும் செய்தேன்.
கணினியில் என் "கியூ பிட்ஸ்" தான்
ஊர்த்துவ தாண்டவமாகும்.
முள்ளிலே போட்ட முடிச்சு
மலரிலே அவிழ்ந்து போகும்.
எத்தனை கைகள் பார்.
எத்தனை கால்கள் பார்.
அவிர்சடை விரிந்ததென்றால்
ஆரக்கிள் என்று சொல்வார்.
உடுக்கைகள் ஒலித்து விட்டால்
யூனிக்ஸ் சிஸ்டம் தெரியும்.
அண்டமே அதிரவைக்கும்
அண்ட்ராய்டு என்னுள் உண்டு
பிக்பேங்க் வெடிக்கும் முன்னே
திரியினை பற்ற வைக்கும்
திரி சூலம் என்னிடம் தான்.
அமெரிக்கர் தெரிந்து கொண்டார்
அதனால் இங்கு வந்தேன்.
ஹிக்ஸ் போஸான் சூத்திரங்கள்
தீச்சுடர் ஏந்துமென் கையில்
தெரிந்ததென சொல்லுகின்றார்.
சாம்பலில் சிறகடிக்கும்
பறவையூர் ஃபீனிக்ஸ் கூட‌
திருநீறு தத்துவம் தான்
தெளிவுகொள் நன்றே இன்று."
இது சிவன் கிண்டிய‌
திருவாதிரைக்"களி"

==============================================================
24 மார்ச் 2014 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக