வியாழன், 24 பிப்ரவரி, 2022

மயிலிறகுகள்

 

மயிலிறகுகள்

____________________________________________ருத்ரா



என் பேனாவின் கடைசிச் சொட்டை

அந்த வெள்ளைக்காகிதத்து 

பாலைவனத்தில் உதறினேன்..

ஒரு கவிதை என்று.

அதை மேய்வதற்கு ஒரு நொண்டி ஒட்டகம் கூட‌

இல்லை அந்த பாழ்வெளியில்.

"போக்கத்தவர்களே

போய்வாருங்கள் உங்கள்

கற்பனைப்பொதிகளின் அழுக்கு மூட்டைகளை

சுமந்து கொண்டு..."

என்றது அந்த வறண்ட தொண்டைக்காடுகளின்

கந்தல் குரல்கள்.

எரிந்து சாம்பலாகட்டும் அந்த‌

மயிலிறகுகள்.

என்னக்கென்ன?...


______________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக