சனி, 26 பிப்ரவரி, 2022

அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.

 அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.

____________________________________________ருத்ரா




பட்டாம்பூச்சிகளை

என் சட்டைப்பை நிறைய

 முட்டையிட வைத்து

அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.

ஓ!பெண்ணே!

உன் இமைச்சிறகுகளின்

ஒவ்வொரு துடிப்பும்

எனக்கு என் கவிதைத் தொகுப்புகள்.

அந்த வர்ணப்பிரளயங்கள்

எனக்குள் சிறகுச்சாமரங்களில்

கனவு வடிவங்களை புயல்களாய்

சுருட்டி வீசுகையில்

உன் காதல் புன்னகை 

இந்த வானமெல்லாம்

வாசல் தெளித்துக்கோலமிடும்.

நட்சத்திரப்பரல்கள் தெறிக்கும்

சிலம்புகளாய்

உடைத்து உடைத்து நீ

சிரிக்கும் போது

இதோ நான்

மேகங்களின் பஞ்சுப்பிசிறுகளாய்

சிதறிப்போகிறேன்.


_________________________________________










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக