புதன், 29 நவம்பர், 2017

ரஜனி முகம்மது படையெடுப்பாரா? மாட்டாரா?


ரஜனி முகம்மது படையெடுப்பாரா? மாட்டாரா?
=============================================================ருத்ரா

அந்த டிவி ஊடகம்
கருத்துக்கணிப்பு மூலம்
சொல்லியிருக்கிறது..
பெரும்பாலும்
ரஜனி
வாளேந்தப்போவதில்லை
என்று.
"போர்
வரும் ஆனால் வராது"
என்று
பஞ்ச் டயலாக் ஏதும் கூறவில்லை.
அதன் சொந்தக்காரர்
"என்னத்தெ கன்னையா"
தான்
"என்னத்தெ..கட்சி ஆரம்பித்து..."
என்று வசனம் பேசுவது போல் இருக்கிறது.
ரஜனியின் தோட்டத்தில்
இன்னும் காலம் "கனியவில்லை"
ஜிகினா மகுடம் சூட்டிக்கொண்டு
தமிழ் நாட்டில் வேண்டுமானால்
சேர சோழ பாண்டிய வேஷங்கள்
கட்டிக்கொண்டவர்கள் கூத்து நடத்தலாம்.
ஆத்மீகத்தை வைத்துக்கொண்டு
அருள்வாக்குகள் டூப்பு விடலாம்
என்பதை விட‌
மதமே இல்லாத ஒரு மதத்தை
ஏன் உருவாக்கக்கூடாது
என்பதையும் அவர் யோசிக்கலாம்.
தியானம் செய்பவர்கள்
மலையில் போய் தியானம் செய்யலாம்.
இவர் மட்டுமே
தன் மேல் ஒரு இமயத்தை நிறுத்திக்கொண்டு
தியானம் செய்பவர்.
அந்த இமயத்தின் நாடி நரம்புகள் தானே
நம் நதிகள்.
அந்த தோப்பூள் கொடியை எல்லாம்
ஒன்றாய் இணைத்து
மக்களின்
இதயங்களில் மனிதம் மட்டுமே
மலரப்போகும் நாள் வரும்போது
கட்டாயம்
மண்ணின் சமநீதியை வெல்ல‌
அந்த வாக்குச்சீட்டுகள் எல்லாம்
அவர் கையில்
வாள் சுழற்றும்.

=============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக