செவ்வாய், 28 நவம்பர், 2017

கமலின் சாசனம் (2)

கமலின் சாசனம் (2)
=====================================ருத்ரா

ஊடகங்கள் நடத்திய‌
கருத்துக்கணிப்பு எனும்
செப்பு விளையாட்டில்
உயர்ந்து
உட்கார்ந்து கொண்டிருக்கிறார்
கமல்!
எப்படியெல்லாமோ அவர்கள்
சோழி குலுக்கிப்போட்டிருக்கிறார்கள்.
எல்லா சோழிகளும்
கமல் பக்கமே.
இதென்ன சின்னப்புள்ள‌
விளையாட்டாவுல்ல இருக்கு
என்று
வடிவேலு பாணியில்
மற்றவர்கள் வாய்பிளக்கலாம்.
சூப்பர் ஸ்டாரோ
கமல் மாதிரி
காரம் நிறைந்த கேள்விகளை
வைத்துக்கொண்டு
"வேட்டையாடு விளையாடு"
நிகழ்த்துவதில்லை.
அன்று உயிர்ப்பு காட்டிய‌
"ராகவேந்திரா"வை
இன்று மெய்சிலிர்த்து
புளகாங்கிதம்
அடைந்துகொண்டிருக்கிறார்!
விஜய்
தளபதி என்ற பட்டம்
சூட்டிக்கொண்ட போதும்
தன் "படம்" ரிலீஸ்ல்
உள்ள "மெர்ஸலை"யே
தன் வெற்றிகரமான "மெர்ஸல்"
ஆக்கிக்கொண்டதில்
வேர்த்து விறுவிறுத்து
சினிமா வேலிக்குள்ளேயே
பிரம்மாண்ட ரோஜாவாய்
சிரித்துக்கொண்டிருக்கிறார்.
அரசியல்
அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்
என்பதே அவரது தற்போதைய அரசியல்.
விஜய்காந்த் வியூகம் இன்னும்
புரியவில்லை.
சீமான் சீற்றத்தை மட்டுமே
ஜிகினாவாய் ஆக்கி
தோரணம் கட்டுகிறார்.
கமல் தான் ஆதிக்க "பல்லக்கு"களுக்கு
சுளுக்கு எடுக்கும் அறிக்கைகள் இடுகிறார்.
அவருக்கு இயன்ற‌
"110"ன் கீழ் விதிகளை
அல்லது திகில்களை
ட்விட்டர் எனும் சிறுகுருவியின்
அலகுகளிலேயே
ஆர்ப்பரிக்கும் அலைகள் ஆக்குகிறார்.
ரஜனி இன்னும் கடை விரிக்கவில்லை.
விஜய்
"என்னங்ணா"வில்
ஏதோ ஒரு வில்லை வளைக்கிறார்.
தேர்தல் எனும் "கணிப்பு"
எப்போதும்
கழுவிய நீரில்
நழுவிய மீன்கள் தான்.
"ஓட்டு" போட தயாராய் இருக்கும்
"வசூல் ராஜா"க்களிடம்
கமலின் வசூல் ராஜா வெற்றி பெறுவாரா?

=======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக