புதன், 29 நவம்பர், 2017

நகைச்சுவை (5)

நகைச்சுவை (5)
===================================ருத்ரா

ஆர்.கே நகரில் ஒரு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் செல்பவரை
போலீஸ்காரர் நிறுத்துகிறார்.

"ஏய்...நிறுத்து..நிறுத்து"

அவர் நிறுத்துகிறார்.அவர் சூட்கேஸை இவர் சோதனை போடுகிறார்.

"இவ்வளவு கேஷ்..எல்லாம் புது நோட்டுகள்..
எல்லாம் யாரிடம் வாங்கினீர்கள்? எங்கே
கொண்டு போகிறீர்கள்?ம்ம்ம் சொல்லுங்க"

"ஏ ஏ பேங்கிலிருந்து ட்ராப் பண்ணிட்டு போறேங்க."

"அது என்ன பேங்கு?"

"அதாங்க ஏ ஏ பேங்கு"

அப்படின்னா?

"அதாங்க "அம்மாவின் ஆன்மா" பேங்கு."

(அந்த மோட்டார் சைக்கிளுக்கு திடீரென்று சக்கரங்களும் இல்லை.
ஓட்டி வந்தவருக்கு கால்களும் இல்லை)

"என்னது? அம்மாவின்....சரி போ போ"

(போலீஸ்காரர் வெல வெலத்து மயங்கி விழுந்து  விட்டார்)

==============================================================
(இது ஒரு கற்பனை உரையாடல் நகைச்சுவைக்காக)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக